Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் ஜிகே வாசன், சபரீசன்: பதவிக்கான பயணமா?

Advertiesment
காங்கிரஸ்
, வெள்ளி, 10 மே 2019 (09:13 IST)
மக்களவையின் ஆறாம் கட்ட தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ளது. அதன்பின்னர் கடைசி கட்ட தேர்தல் மே 19ஆம் நடைபெற்று, மே 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அன்றைய தினம் மாலையே அடுத்த ஆட்சியை அமைப்பது யார்? என்பது கிட்டத்தட்ட தெரிந்துவிடும்
 
இந்த நிலையில் இப்போதே அரசியல் தலைவர்கள் டெல்லியை வட்டமிட தொடங்கிவிட்டனர். அடுத்த ஆட்சியை யார் அமைத்தாலும் அதாவது பாஜக, காங்கிரஸ், மூன்றாம் அணி யார் அமைத்தாலும் அதில் பங்கு பெறுவது என்ற முடிவை திமுக எடுத்துள்ளதாகவும், போட்டியிடும் 20 தொகுதிகளில் 15 தொகுதிகளில் வெற்றி உறுதி என்பதால் பத்து அமைச்சர் பதவிகளையாவது வாங்கிவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தைக்காகத்தான் ஸ்டாலின் மருமகன் சபரீசன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது
 
காங்கிரஸ்
அதேபோல் ஒரே ஒரு தொகுதியை அதிமுக கூட்டணியில் பெற்று ஆட்டோ சின்னத்தில் போட்டியிடும் தமாக தலைவர் ஜிகே வாசனும் டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவர் தனது கட்சியை பாஜக அல்லது காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆளும் கட்சி எது? என்பதை முடிவு செய்துவிட்டு அதன்பின் தனது அடுத்த காயை அவர் நகர்த்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
திமுக கூட்டணியில் உள்ள மேலும் சில தலைவர்களும் குறிப்பாக திருமாவளவன் அமைச்சர் பதவியை பெற முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது!...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவில் இணையும் ஐடியா...? தங்க தமிழ்செல்வன் ஓபன் டாக்!