Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு அரசுக்கு பயம் வந்துவிட்டது: பாலபாரதி சாடல்!

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு அரசுக்கு பயம் வந்துவிட்டது: பாலபாரதி சாடல்!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2017 (16:50 IST)
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதையடுத்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல இந்த போராட்டமும் உருமாறும் என கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானதில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றினர்.
 
இதனை மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து பிரபல தமிழ் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாலபாரதி, மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அதிமுகவுக்குச் சொந்தமானது அல்ல.
 
ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தியானம் செய்யலாம், எடப்பாடி பழனிசாமி அரசு செல்லலாம், ஆனால், மாணவர்கள் தியானம் நடத்தக்கூடாது. அரசியல்வாதிகள் அங்கு பதவிக்கான போராட்டம் நடத்தலாம். மாணவர்களின் உரிமைக்கான போராட்டம் நடத்தக்கூடாதா? என்றார் கடுமையாக.
 
மக்களின் சுதந்திரத்தையும் கருத்துரிமையையும் பறிக்கும் செயல் இது. ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு, அரசுக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான், காவல்துறையை வைத்து அடக்குமுறைகளை ஏவிவிடுகின்றனர் என்றார் பாலபாரதி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments