Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மாதங்களுக்கு வங்கி இ.எம்.ஐ வசூலிக்கப்படாது! – நிதித்துறை செயலாளர்!

Webdunia
செவ்வாய், 31 மார்ச் 2020 (15:17 IST)
அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகளுக்கான இ.எம்.ஐ மற்றும் வட்டிகளை செலுத்த தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுபாட்டு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அன்றாட வேலை செல்லும் மக்கள் பாதிப்புள்ளாகியுள்ள நிலையில் அவர்களுக்கு மாத நிவாரணம் தர அரசு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழில்கள் முடங்கியுள்ளதால் மக்கள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை திரும்ப செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தவணை மற்றும் வட்டிகளை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் வங்கிகள் இதுகுறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தன.

இந்நிலையில் இன்று செய்தி வெளியிட்டுள்ள தமிழக நிதி செயளாலர் கிருஷ்ணன் அடுத்த மூன்று மாதங்களுக்கு வங்கி கடன்கள் வசூலிக்கப்படாது எனவும், இதுகுறித்த ஆர்பிஐ அறிவிப்பு சம்பந்தப்பட்ட வங்கி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments