Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலை விட்டு போக தயார்: எச்.ராஜா சவால்!

அரசியலை விட்டு போக தயார்: எச்.ராஜா சவால்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (11:59 IST)
தமிழக பாஜக மூத்த தலைவரும், பாஜக தேசிய செயலாளருமான எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறுவதில் பிரபலம். இவர் தற்போது பிரதமர் மோடி மக்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என கூறவில்லை என தெரிவித்துள்ளார்.


 
 
அப்படி பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே போகிறேன் என கூறியுள்ளார். திருச்சி மண்டலம் சார்பாக கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் இணைவோம் அனைவரும் வளர்வோம் என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டபோது எச்.ராஜா இவ்வாறு பேசினார்.
 
அப்போது பேசிய எச்.ராஜா, திருமாவளவன், சீமான் போன்றவர்கள் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியை விமர்சிக்க அவர்களுக்கு எள்ளளவும் தகுதியில்லை. உண்மைக்கு புறம்பாக திருமாவளவன் பிரதமர் மோடியை விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என எச்.ராஜா கூறினார்.
 
தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி மக்களோட வங்கிக் கணக்கில் பணம் போடுவதாக எப்போதும் சொல்லவே இல்லை, அப்படி அவர் சொன்னதாக யாரும் நிரூபித்தால், அரசியலைவிட்டே நான் போய்விடுகிறேன். நிரூபிக்க முடியலைன்னா, நீங்க மீடியா வேலையை விட்டு போக தயாரா? என்று ஊடகங்களுக்கு சவால் விட்டார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்