Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வெற்றி பெற்றால்தான் எல்லாம் நடக்கும் - ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (10:44 IST)
மத்திய அரசு காவிரி மேலாண்ம வாரியம் அமைப்பது பற்றி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு நேற்றோடு முடிவடைந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா “ உச்ச நீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தையைத்தான் குறிப்பிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் என்று கூறவில்லை. அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.  இதே உச்ச நீதிமன்றம்தான் நீட் தேர்வை கொண்டுவந்தது. ஆனால், திமுக ஏற்கவில்லை. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி பேச இவர்களுக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்து போது காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. 
 
கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால்தான காவிரி மேலாண்மை அமையும். எனவே, கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.
அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments