Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசிக்கொண்டிருந்தபோதே மாரடைப்பு! நேரலையில் உயிரிழந்த சித்தராமையா ஆதரவாளர்! - அதிர்ச்சி வீடியோ!

Prasanth Karthick
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (11:48 IST)

பெங்களூரில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும்போதே சித்தராமையா ஆதரவாளர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கர்நாடக மாநில முதலமைச்சரான சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுனர் உத்தரவிட்டதை கண்டித்து பல்வேறு இடங்களிலும் கண்டன போராட்டங்கள் நடந்து வருகிறது. அவ்வாறாக பெங்களூர் விதானசவுதா அருகே கர்நாடக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் சங்க நிர்வாகியும், சித்தராமையா ஆதரவாளருமான சி.கே.ரவிச்சந்திரன் என்பவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.

 

அப்போது பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த வீடியோவும் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 நாட்களுக்கு முன் ஒத்திவைக்கப்பட்ட தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? அன்புமணி

சென்னையில் 100° F வெயில் சுட்டெரிக்கும்! வானிலை எச்சரிக்கை..!

தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மூடி விடலாமே? உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்.!!

அரசு பள்ளியாக மாற்றப்பட்ட அம்மா உணவகம்.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்து மகா பாவம் செய்துவிட்டார்கள்.! முன்னாள் தலைமை அர்ச்சகர் ஆதங்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments