Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது: தென்மேற்கு பருவமழை எப்போது?

Webdunia
புதன், 24 மே 2023 (17:05 IST)
இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை என்பது தற்பொழுது ஓய்ந்திருப்பதாகவும்  அடுத்த இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தற்பொழுது தெரிவித்து இருக்கிறது
 
ராஜஸ்தான் பஞ்சாப் டெல்லி உத்திர பிரதேசம் ஹரியானா சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் 6 மாநிலங்களில் மலைப்பகுதியை ஒட்டி இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களில் அந்தமான் கடற் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது 
 
மேலும் மே 24ஆம் தேதி கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாதத்திற்கும் மேல் குளிக்காத கணவர்.. திருமணமான 40 நாட்களில் விவாகரத்து கேட்ட மனைவி..!

மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது லாரி மோதியதால் கை முறிவு: அன்புமணி கண்டனம்..!

விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கும் திமுக.. யார் யார் கலந்து கொள்கிறார்கள்?

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் ரயில் சேவை! கடைசி நேரத்தில் பெயர் மாற்றம்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: தீவிரம் காட்டும் மத்திய அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments