Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் கனமழை: மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு

Webdunia
சனி, 9 ஜூன் 2018 (11:55 IST)
கடந்த சில வாரங்களாகவே தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளாவில் பருவ மழை தொடங்கிவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகிறது. 
 
இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலின் மேல்மலை கிராமங்களிலும் கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பயங்கர காற்றில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
 
மேலும் கொடைக்கானல் பகுதியில் உள்ள சில இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்துள்ளதால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.  எனவே கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள சுற்றுலா பயணிகள் அங்கிருக்கும் நிலவரம் அறிந்து செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த கனமழையால் கொடைக்கானலில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்பதில் மட்டும் அப்பகுதி மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments