Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்

16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை: சென்னை வானிலை மையம் தகவல்
, சனி, 17 ஜூன் 2023 (14:45 IST)
நாளை தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நாளை அதாவது ஜூன் 17ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் ஜூன் 18ஆம் தேதி வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 
மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத்தில் பிபர்ஜாய் புயலின்போது பிறந்த 707 குழந்தைகள்