Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை..!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (08:01 IST)
சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கன மழை வெளுத்து வாங்குவதாக வெளிவந்திருக்கும் தகவல் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெப்ப அனலை தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதியில் இருந்தனர். அவ்வப்போது மின்சார தடையும் ஏற்பட்டதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென சென்னை புறநகர் பகுதியில் கன மழை வெளுத்து வாங்குவது. குறிப்பாக ஊரப்பாக்கம் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது
 
மேலும் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments