Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Advertiesment
Rain

Prasanth Karthick

, ஞாயிறு, 4 மே 2025 (18:27 IST)

தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் 10 மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழ்நாட்டில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில் பல மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டியுள்ளது. கத்தரி வெயில் தொடங்கவுள்ள நிலையில் வெப்பம் இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வெப்பத்தை குறைக்கும் விதமாக காற்றுடன் கூடிய மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை ஆகிய 10 மாவட்டங்களில் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!