Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (14:50 IST)
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்றி காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் மழை ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது :

வெப்பச்சலனம் காரணமாக தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என கூறியுள்ளது.

மேலும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதால் இது தீவிரம் அடைந்து, அடுத்த 48 மணிநேரத்திற்குள் வடமேற்கு திசை நோக்கி நகரும் என தெரிவித்துள்ளது. எனவே, அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு அந்தமான் தென்கிழக்கு வன்காள விரிகுடா உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments