Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப்பள்ளியிலும் ஹிந்தி திணிப்பு – வருகைப்பதிவேட்டில் தூக்கப்பட்ட தமிழ் !

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (08:30 IST)
அரசுப்பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆசிரியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவேட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அரசுப்பள்ளிகளில் கடந்த சில வருடங்களாக பயோமெட்ரிக் மற்றும் கணினிகள் மூலமாக வருகைப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையைப் பதிவு செய்ய விரல் ரேகை பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேப்போல பள்ளி முடிந்து செல்லும் போது கைவிரல்களை வைத்து பதிவு செய்த பின்னரே செல்ல வேண்டும்.

இந்த பயோமெட்ரிக் எந்திரங்களில் இதுவரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழிநடத்தும் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன. ஆனால் இப்போது தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக ஹிந்தி மொழி திணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது சம்மந்தமாக சமூக வலைதளங்களில் வெளியானப் புகைப்படங்களுக்கு கடுமையானக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தலில் MIC இல்லை..! வேறு சின்னத்தில் போட்டி - சீமான்.!!

நான் தோல்வியடைந்தால் இஸ்ரேல் பூமியில் இருந்து அழிக்கப்படும்.! டிரம்ப் பேச்சால் பரபரப்பு..!!

சட்டம் ஒழுங்கை திசை திருப்பவே லட்டு விவகாரம்.! சந்திரபாபு நாயுடு மீது ஜெகன் மோகன் சரமாரி புகார்.!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - மேலும் 15 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments