Publish Date: Sun, 16 Dec 2018 (10:21 IST)
Updated Date: Sun, 16 Dec 2018 (10:25 IST)
நக்சல்கள் தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள் என ஹெச்.ராஜா கூறியிருப்பது கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டு, 13 அப்பாவி பொதுமக்கள் போலீஸாரால் சுட்டு கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. அதன்படி ஆலையும் மூடப்பட்டது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 3 வார காலத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பெயர்போன பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. நக்சல்கள்தான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கிறார்கள். அவர்களே போராட்டம் நடைபெற்றதற்கு காரணமாகும் என கூறியுள்ளார்.
உரிமைக்காக போராடும் மக்களை தீய சக்திகள், ஆண்ட்டி இந்தியன், நக்சல்கள் என பெயர்சூட்டுவது ஹெச்.ராஜாவின் வாடிக்கையாகும். அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை ஹெச்.ராஜா நக்சல்கள் என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
webdunia
Publish Date: Sun, 16 Dec 2018 (10:21 IST)
Updated Date: Sun, 16 Dec 2018 (10:25 IST)