Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''அதிமுக ஒன்றுபட முயற்சி செய்கிறேன்!'' - கோடநாட்டில் சசிகலா கண்ணீர் மல்க பேட்டி!

Sinoj
வியாழன், 18 ஜனவரி 2024 (20:15 IST)
கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரும் கோட நாடு சென்றனர். அதன்பின்னர், 2017- ஆம் ஆண்டு எஸ்டேட் பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை நடந்த பிறகு சசிகலா இங்கு வரவில்லை.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டிற்கு இன்று மாலை வருகை புரிந்தார்.

இன்று கோடநாடு எஸ்டேட்டில் தங்கும் சசிகலா , நாளை  அந்த பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை வைப்பதற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

இந்த பூஜையைத் தொடர்ந்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்த நிலையில், கோடநாட்டில் செய்தியாளர்களுக்கு வி.கே. சசிகலா செய்தியாளர்களுக்கு கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘’கோடநாடு தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பார்க்க வந்துள்ளேன். ஆனால் இப்படி ஒரு சூழலில் வருவேன் என நினைக்கவில்லை. கோட நாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஜெயலலிதா தெய்வமாக இருந்து, தண்டனை பெற்றுத் தருவார் என நம்புகிறேன். கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவிற்கு பூஜை செய்ய வேண்டி வந்திருக்கிறேன். விரைவில் அவரது சிலை திறக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’அதிமுக ஒன்றுபட தொடர்ந்து முயற்சி  செய்து வருகிறேன். அந்த முயற்சி விரைவில் வெற்றி பெறும் என்றும், அதிமுக ஒன்றுபட ஒருவருக்கு ஒருவர் விட்டுத்தர வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments