Publish Date: Thu, 12 Apr 2018 (14:22 IST)
Updated Date: Thu, 12 Apr 2018 (18:21 IST)
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஐடி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக அரசை ஏமாற்றிவிட்டது என தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. ராணுவ கண்காட்சியை திறந்து வைக்க இன்று மோடி சென்னை வந்துள்ளார். இதற்கு தமிழகம் முழுவது பலரும் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களை பற்றக்க விட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் ஹெலிகாப்டரில் சென்னை ஐஐடி வளாகம் வந்த நிலையில் மாணவர்கள் போராடத்தில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் சென்றபோது பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ஐஐடி வளாகத்திற்கு உள்ளே மற்றும் வெளியே காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.