Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் நிலை பாதிப்பு : இளவரசி கோரிக்கையை நிராகரித்த சிறை நிர்வாகம்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (18:15 IST)
பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு உடல் நிலைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அவர்கள் மூவரும் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சிறையில் வாடும் இளவரசி நீரிழிவு நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் என இளவரசி தரப்பில் சிறைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.


 

 
ஆனால், அவரின் கோரிக்கையை சிறைத் துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. மேலும், சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாம். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இளவரசி தவிக்கிறாராம். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments