Webdunia - Bharat's app for daily news and videos

Install App

350 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்த ஜேப்பியார் குழுமம் – வருமான வரித்துறை தகவல் !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:13 IST)
தமிழகம் எங்கும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் ஜேப்பியார் குழுமம் சுமார் 350 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எம்.ஜி.ஆரின் வலதுகரமாக செயல்பட்டவர் ஜேப்பியார். அவரது ஆட்சியின் போது கல்வி நிறுவனங்களை தொடங்கினார். இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாக ஜேப்பியா குழுமம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்யபாமா கல்லூரி, செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர் கல்லூரி, பனிமலர் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையின்போது கணக்கில் காட்டாத ரூ.3 கோடி மதிப்பிலான தங்கமும், ரூ.5 கோடி பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து இப்போது சுமார் 350 கோடி ரூபாய் பணத்தை கணக்கில் அந்நிறுவனம் மறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments