Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமொழிக் கொள்கையே ஏமாற்று வேலை; ஒரு மொழி போதும்! – கருணாஸ் காட்டம்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (12:50 IST)
மத்திய அரசின் மும்மொழி கொள்கையை தமிழக அரசு எதிர்த்துள்ள நிலையில், இருமொழி கொள்கையே தேவையில்லை என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது என தமிழகத்தில் உள்ள கட்சியினர் பலர் கூறி வந்த நிலையில் இன்று ஆலோசனைக்கு பிறகு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் எப்போது இருமொழி கொள்கையே தொடரும் என தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் இந்த முடிவிற்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எம்.எல்.ஏவும், நடிகருமான கருணாஸ் “மும்மொழி கொள்கை மோசடி என்றால், இருமொழி கொள்கை என்பது ஏமாற்று வேலையாகும். ஒரு மொழி கொள்கை என்பதே நமது உரிமை கொள்கை என்பதில் எதிர்காலத்தில் நிலைநிறுத்த வேண்டும். தாய்மொழி தமிழை நாம் உயர்த்தி பிடிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments