Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிண்டியில் நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த கார்! பெரும் பரபரப்பு

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (06:16 IST)
சென்னை கிண்டி அருகே உள்ள சின்னமலை மெட்ரோ நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காரில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கவனித்த பொதுமக்கள் காரை ஓட்டுபவரிடம் எச்சரிக்க, கார் உடனே நிறுத்தப்பட்டது.

கார் நிறுத்தப்பட்ட ஒருசில விநாடிகள் திடீரென தீப்பிடிக்க தொடங்கியது. இதனையடுத்து காரில் இருந்து 69 வயது தண்டபாணி என்பவரும் அவருடைய மனைவி தனலட்சுமி என்பவரும் உடனே அவசர அவசரமாக இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர்

இதுகுறித்து தகவல் அறிந்த கிண்டி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து இரும்பு எலும்புக்கூடு போன்று ஆகிவிட்டது. இது பற்றி கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments