Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் தொடரும் சோதனை.. கரூரிலும் சோதனை நடப்பதால் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (10:38 IST)
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வரும் நிலையில் இதன் தொடர் தொடர்பாக கரூரில் தற்போது சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென வருமானவரித்துறை நடத்தினர். அதுமட்டுமின்றி அவருக்கு நெருக்கமான இடங்கள் மற்றும் சில முன்னணி கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை தொடர்ந்தது. சென்னையில் உள்ள அபிராமி திரையரங்கு உரிமையாளர் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு மேல் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் சோதனை நடந்து வரும் நிலையில் தற்போது திடீர் திருப்பமாக கரூர் மாவட்டத்தில் இன்று முதல் நான்கு இடங்களில் சோதனை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னும் ஓரிரு நாட்கள் இந்த சோதனை தொடரும் என்பதால் இந்த சோதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments