Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 1 கோடி நிதியுதவி; கமல்ஹாசன்

Arun Prasath
வியாழன், 20 பிப்ரவரி 2020 (16:18 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.

10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பின் போது விபத்தில் பலியான 3 பேரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சினிமா பிரபலங்கள் வைரமுத்து, தனுஷ், மாரி செல்வராஜ், சிம்ரன், எஸ்.ஜே.சூர்யா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments