Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களை இந்திய கடலோர காவல்படை சுடவேயில்லை: திண்டுக்கல் சீனிவாசன்

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (15:31 IST)
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கள் சீனிவாசன் கூறியுள்ளார்.


 

 
கடந்த 13ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதைத்தொடர்ந்து நேற்று மத்திய பாதுகப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்து. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தோட்டா, கடலோரக் காவல்படையினரது இல்லை என்று தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது:-
 
ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை துப்பாக்கியால் சுடவில்லை. கடலோர காவல்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது தவறானது. கடலோர காவல்படை சுடவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது சரியானது என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments