Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: வானிலை அறிவிப்பு..!

Siva
ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (12:44 IST)
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வட மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இந்த நிலையில் ஆந்திராவின் கிழக்கு பகுதியில் சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் இருப்பதாகவும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து ஓடிஸா மட்டும் மேற்குவங்க கடற்கரையை நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன் பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் வழியாக மேற்கு, வடமேற்கு நோக்கி நகரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

மொபைல் எண்ணை தெரிவித்து துப்பாக்கிபட பாணியில் ஐ ஆம் வெயிட்டிங் என கையில் லத்தியுடன் எஸ்.பி. வருண்குமார் அச்சத்தில் சமூக விரோதிகள்!

'வாழு.. வாழ விடு' - இதுல யாரையும் இழுத்துவிடாதீங்க..! விவாகரத்து குறித்து மனம் திறந்த ஜெயம் ரவி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments