Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமான வரி சோதனை - சென்னையில் ரூ.10 கோடி பறிமுதல்

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2016 (15:56 IST)
சென்னை சவுகார்பேட்டையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.10 கோடி சிக்கியுள்ளது.


 

 
கருப்புப் பண ஒழிப்பு என்ற முழக்கத்த எடுத்த மத்திய அரசு முதலில் மக்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளது. அதன் பின் இந்தியாவில் உள்ள பல பண முதலைகளிடம்  வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
 
அந்த சோதனைகளில் பல கோடி மதிப்பிலான கருப்புப் பணம் சிக்கி வருகிறது. சமீபத்தில் சென்னையில் சேகர் ரெட்டி என்ற தொழிலதிபரிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்பிலான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. 
 
இந்நிலையில், சென்னை சவுகார்பேட்டையில் உள்ள ஒரு நகை வியாபாரியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.10 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
அந்த பணத்தை ஏன் அவர் வங்கியில் செலுத்தவில்லை?.. அப்படியெனில் அவை கருப்பு பணமா? என அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரிப்பு.. மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!

14 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்: பகுஜன் சமாஜ் பொது செயலாளருக்கு செல்வப்பெருந்தகை நோட்டீஸ்

ஒரு சவரன் ரூ.56,000ஐ தொட்டது தங்கம் விலை.. இன்னும் உயரும் என தகவல்..!

ஒரு வாரத்தில் உச்சம் சென்ற பங்குச்சந்தை இன்று சரிவு.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மின்சாரம் தாக்கி தம்பி பலி.. இறுதி சடங்கில் அக்காவும் ஷாக் அடித்து பலி! - திருவாரூரில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments