Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் ஐடி ரெய்டு.! போலீசார் குவிப்பு..!!

Senthil Velan
வியாழன், 4 ஏப்ரல் 2024 (20:49 IST)
நெல்லையில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
 
தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ஆன்லைன் பண பரிமாற்றங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் சாபாநாயகரும் நெல்லை திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான ஆவுடையப்பன் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமாவரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

ALSO READ: பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த விஜய பிரபாகரன்..! உருட்டி உருட்டி போட்ட ராஜேந்திர பாலாஜி…!!
 
வருமான வரி சோதனை குறித்து தகவல் அறிந்த திமுகவினர், அங்கு திரண்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments