Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவின் அழைப்பு! ஓபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த தீபா

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2019 (19:28 IST)
அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் இதுகுறித்து தொண்டர்களிடம் கருத்து கேட்டு அதன்படி நடந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஜெ.தீபா இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து கூறிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'ஜெ தீபா உள்பட யார் வந்தாலும் அதிமுகவில் இணைத்து கொள்வோம் என்று கூறினார்

இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் அழைப்பு குறித்து சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா கூறியபோது, 'ஓபிஎஸ் அவர்களின் அழைப்புக்கு நன்றி. அவருடைய அழைப்பு எனக்கு மட்டுமின்றி எங்கள் தொண்டர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து அதிமுகவுடன் இணைந்து செயலாற்றுவோம். புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கட்டிக்காத்த அதிமுகவுக்கு எதிராக நாங்கள் இதுவரை எந்த நிலைப்பாடும் எடுத்ததில்லை என்று கூறினார்.

மேலும் ஜெயலலிதா அவர்களின் உறவினர் என்ற வகையில் அவருடைய மரணம் குறித்த சந்தேகத்தை தொடர்ந்து எழுப்புவோம். அதிமுகவுடன் இணைந்து செயல்பட்டாலும் அந்த நிலைப்பாட்டில் இருந்து எந்த மாறுதலும் இருக்காது' என்று அவர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments