Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிந்ததும் டிடிவி தினகரன் தான் பொதுச்செயலாளர், ஓபிஎஸ் தான் தலைவர்: ஜெயக்குமார்

Siva
செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (14:50 IST)
தேர்தல் முடிந்ததும் பாஜகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இருப்பார் என்றும் தலைவராக ஓபிஎஸ் இருப்பார் என்றும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை செய்த போது பாஜக மற்றும் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி பேசினார். தேனியில் அவர் பிரச்சாரம் செய்தபோது தேனியில் டிடிவி தினகரன், ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆகிய இரண்டு பேருமே தோல்வி அடைவார்கள் என்றும் ஆனாலும் அவர்கள் தேர்தலுக்கு பின்னர் பாஜகவின் முக்கிய இடத்தை பிடிப்பார்கள் என்றும் கூறினார்.

தேர்தலுக்கு பின் டிடிவி தினகரன் தான் பாஜகவின் பொதுச் செயலாளர் மற்றும் ஓபிஎஸ் தான் தலைவர் என்றும் அவர் கூறினார். தற்போது பாஜகவின் தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றும் ஜெயக்குமார் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மக்களவைத் தேர்தலுக்குப் பின் காணாமல் போய்விடும் என அண்ணாமலை கூறியதற்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments