Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தம்பிதுரைக்கு ஆதரவாக களமிறங்கிய ஜெயகுமார்: என்ன நடக்கிறது அதிமுகவில்?

Webdunia
செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (12:54 IST)
பாஜகவிற்கு எதிராக தம்பிதுரை பேசியதில் எந்த தவறும் இல்லை என மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
 
சமீபகாலமாக பாஜக குறித்தும் மோடி குறித்தும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அதிமுக முக்கிய தலைவரும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை. அதிமுகவில் இருந்துக்கொண்டு இவர் மட்டும்தான் பாஜகவை அடிக்கடி விமர்சித்து வருகிறார். ஆனால் அதிமுக அமைச்சர்கள், பாஜக குறித்து தம்பிதுரை பேசுவது அவரின் தனிப்பட்ட கருத்து என சமாளித்து வந்தனர். 
 
நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுமே மக்கள் பயன் பெறும் விதமாக இல்லை எனவும், முக்கியமாக பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கையால் தமிழகத்தில் சிறு குறி வியாபாரிகள் பெரிதாக பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 
 
கஜா, தானே, ஓகி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் பல விஷயங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து 10,000 கோடி நிதி வர வேண்டியது இருக்கு தமிழகத்திற்கு. ஒவ்வொரு முறையும் காசுக்காக உங்களிடம் பிச்சை எடுக்க வேண்டியுள்ளது. மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என சொல்லும் மத்திய அரசு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்வது ஏன்? துணிகளை ஏன் பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்கிறது? என கேள்வி எழுப்பினார். இவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில், பொன்முடி தம்பிதுரையின் பேச்சு அவரின் தனிப்பட்ட கருத்தா அல்லது அதிமுகவின் ஒட்டுமொத்த கருத்தா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஜெயகுமார், தம்பிதுரை பேசியதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசின் திட்டங்களால் மாநில அரசுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்புவது மாநில அரசின் கடமை. ஆகவே தம்பிதுரை பேசியதில் தவறேதும் இல்லை என கூறினார்.
 
முன்பெல்லாம் தம்பிதுரை பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயகுமாரே கூறி வந்த நிலையில் திடீரென அவர் தம்பிதுரைக்கு சப்பைக்க்ட்டு கட்டுவது ஏன் என கேள்வி எழுகிறது. நம் சந்தேகங்களுக்கான விடை விரைவில் தெரியவரும்...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments