Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரோடு இருக்கும் போது அம்மா; இறந்த பின்னர் ஜெயலலிதாவா: நீதிபதியின் கண்டிப்பு!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (14:51 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணத்திற்கு பின்னர் அவரது வாரிசு பிரச்சனை பெரிதாக நடந்து வருகிறது.
 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். ஆனால், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தனர்.
 
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை சமீபத்தில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற வாதத்தில், ஜெயலலிதாவின் உடலிலில் இருந்து டிஎன்ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
 
இந்த வழக்கின் விசாரணையின் போது ஜெயலலிதாவை தாய் என உரிமை கோரும் அம்ருதா சோபன் பாபுவை ஏன் தந்தை என உரிமை கொண்டாடவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் உயிருடன் இருக்கும் போது அம்மா என்று அழைத்தவர்கள் எல்லாம் தற்போது ஜெயலலிதா என பெயர் சொல்லி அழைக்கின்றனர். காலையில் மாலைப்போடுவதும், மாலையில் காலை வாரி விடுவதுமே தமிழகத்தின் தலைவிதியாகிவிட்டது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments