Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் உயில் திருட்டு?: அதிர்ச்சி தகவல்!

ஜெயலலிதாவின் உயில் திருட்டு?: அதிர்ச்சி தகவல்!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (13:06 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா ஒன்று கொடநாடு எஸ்டேட்டில் உள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஓம் பகதூர் என்பவர் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டார். மேலும் அங்கு கொள்ளை சம்பவமும் நடைபெற்றது.


 
 
இந்த வழக்கை தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இதில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வருகின்றன. இந்த கொலையின் மூளையாக செயல்பட்ட கனகராஜ் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அவருக்கு உதவியாக இருந்த சயன் என்பவரும் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட சந்தேகத்தை ஏற்படுத்தியது.
 
கனகராஜ் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். இவர் கூலிப்படைகளை வைத்து இந்த சம்பவத்தை செய்துள்ளார். ஜெயலலிதாவின் அறை கதவை உடைத்து அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 200 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது.
 
ஆனால் ஜெயலலிதா அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த 3 சூட்கேஸ்கள் இதில் திருடப்பட்டதாகவும், அதில் சொத்து ஆவணங்களும், ஜெயலலிதாவின் உயில் பத்திரங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், உயில் போன்றவற்றை கைப்பற்ற அரசியல் பிரமுகர் யாராவது இதன் பின்னணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வைத்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments