Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதவி… திமுகவில் ஆட்கள் பஞ்சம் வந்துவிட்டதா ? – அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி !

Webdunia
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (15:07 IST)
அமமுகவில் இருந்து திமுகவுக்குத் தாவிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்தபோது அதிலிருந்து விலகி தினகரன் துவங்கிய அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் அவருக்கு வலது கைபோல செயல்பட்டார். பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட மனகசப்பால் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். அவர் கட்சியில் இணைந்து சில மாதங்கள் ஆகியும் அவருக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று அவருக்கு திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

திருச்சி சிவா, ஆ ராசா ஆகியோர் அப்பதவியில் இருக்கும் நிலையில் மூன்றாவதாக தங்க தமிழ்ச்செல்வனுக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. இதுபற்றி அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ‘ திமுகவுக்காக உழைத்தவர்கள் பலர் இருக்க, இந்த பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்கப்பட்டது, திமுகவில் ஆட்கள் பஞ்சம் இருப்பதையேக் காட்டுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல திமுக ஆக்கிரமிப்பு அதிமுக இருக்கிறது. ’ எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments