Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்; நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்;  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
, வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (16:04 IST)
நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.  
 
அமைச்சர் பெரியசாமி, வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்ட வழக்கை மீண்டும் எடுத்து விசாரிக்க இருக்கும் தன்னை வில்லன் போல் சிலர் பார்ப்பார்கள் என்று கூறிய நீதிபதி  ஆனந்த் வெங்கடேஷ், லஞ்ச ஒழிப்பு துறையின் நடைமுறை மோசமாக இருப்பதாக தெரிவித்தார். 
 
வளர்மதி வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவரிடம் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அதிகாரியே மேல்விசாரணையின் போது வழக்கை முடித்து வைக்க கோரி இருக்கிறார் என்றும் அவர் கூறினார். 
 
அதேபோல் அமைச்சர் ஐ பெரியசாமி விடுவிக்க கூடிய மனுவையும் வழக்கை ரத்து செய்ய கோரி கோரிய மனுவையும் அவர் தள்ளுபடி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார் 
 
தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுக்கவில்லை என்று கூறிய அவர் நீதித்துறையை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஔரங்கசீப், பாபரால் கூட சனாதன தர்மத்தை ஒழிக்க முடியவில்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு