Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுளை பார்த்து தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் அளிக்கவில்லை: நீதிபதி விளக்கம்.

judge
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:08 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது 

உச்சநீதிமன்றத்திலும்  செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.

 செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது

  ஆனால் இது குறித்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுத்த நீதிபதி திரிவேதி விளக்கம் அளித்த போது 'மூளையில் கட்டி குறித்து நான் கூகுளில்   சில தகவல்களை பெற்றேன். மூளையில் ரத்தக்கட்டு என்றால் என்ன? அதற்கு தீர்வு என்ன என்பதை தேடினேன்.

  அதன் பின்னர் அது மருந்துகளால் குணப்படுத்த கூடியது என்று அறிந்தேன். எனவேதான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என்று உத்தரவிட்டேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாகரன் மகள் வீடியோ வைரல்.. உண்மையா? ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதா?