Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘கக்கூஸ்’ ஆவண பட இயக்குனர் திவ்யபாரதி திடீர் கைது

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (13:21 IST)
சமூக ஆர்வலரும், ஆவணப்பட இயக்குனருமான திவ்யபாரதி இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
2009ம் ஆண்டு திவ்யபாரதி மாணவராக இருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தற்போது அவரை கைது செய்துள்ளது தமிழக போலீஸ். 
 
இவர் ‘கக்கூஸ்’ என்ற ஆவண படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் துப்புரவுப் பணியாளர்களின் வேதனைகளை பதிவு செய்தது. எனவே, இப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது. சமூக செயல்களுக்காக சமீபத்தில் பெரியார் சாக்ரடீஸ் விருதையும் திவ்யபாரதி பெற்றுள்ளார். 
 
இந்நிலையில்தான் அவரும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் ஆகஸ்டு 8ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர்கள் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்த வளர்மதி என்ற கல்லூரி மாணவி மீது, சமீபத்தில் தமிழக அரசு குண்டாஸ் சட்டம் போட்டு அவரை கைது செய்துள்ள நிலையில், திவ்யபாரதியின் கைது பலரை கொந்தளிக்க செய்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments