Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மய்யத்தில் அவுட் ஆகும் இன்னொரு விக்கெட்! – பாஜகவில் இணைவதாக தகவல்!

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:00 IST)
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மாநில செயலாளர் சரத்பாபு விலகி பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம். கட்சி தொடங்கி 4 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் கட்சியில் சேர்ந்த பலரும் தொடர்ந்து கட்சியை விட்டு வெளியேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கட்சியின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்ட சரத்பாபு ம.நீ.மவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு உள்ளாட்சி தேர்தல்களிலும் கமல்ஹாசனின் ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்ததாகவும், தற்போது முற்றிலும் ஈடுபாடு குறைந்து வருவாய் ஈட்டும் மனநிலைக்கு அவர் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தற்போது மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியுள்ள சரத்பாபு இன்று பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments