Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் என்ன புண்ணியம் செய்தேன்? பிக்பாஸ் 2 வின்னர் ரித்விகாவின் தந்தை நெகிழ்ச்சி

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (07:25 IST)
நேற்று நடைபெற்ற பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின் இறுதியில் ரித்விகா பிக்பாஸ் 2 சீசனின் வின்னராக அறிவிக்கப்பட்டார். கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் துள்ளி குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரித்விகா.

ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டதும் அவருடைய பெற்றோர் மேடையேறினர். தனது மகள் வின்னரானது குறித்து அவரது தந்தை கூறியபோது, 'ரித்விகா போன்ற ஒரு மகளை பெற்றதற்கு நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை. அதைவிட உலகநாயகன் பக்கத்தில் நின்று பேசும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். என் மகளின் வெற்றிக்கு பெரும்பங்கு கமல்ஹாசன் அவர்களுக்கு உண்டு. அவருக்கு எனது நன்றி என்று ரித்விகாவின் தந்தை கூறினார்.

பிக்பாஸ் 2 பட்டத்தை வென்ற பின்னர் ரித்விகா கூறியதாவது, 'நான் பெற்ற முதல் முழு வெற்றி இது. ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது. இந்த பட்டத்தை வெல்ல எனக்கு என் சக போட்டியாளர்கள் பெரும் உதவியாக இருந்தனர். இந்த பட்டத்தை நான் அவர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன்' என்று கூறினார்.

 நிகழ்ச்சியின் இறுதியில் விஜய் டிவியின் மேனேஜிங் டைரக்டர் ரித்விகாவுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments