Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தைக்கு ஏன் சிலை ? – கமல் விளக்கம் !

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (09:27 IST)
தனது தந்தைக்கு சிலை வைப்பது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகரும் அரசியல்வாதியுமான கமலின் 65 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளன்றுதான் அவரது தந்தையின் நினைவு நாளும் வருகிறது. இதையடுத்து  கமல் தனது தந்தை சீனிவாசன் அவர்களுக்கு பரமக்குடியில் சிலை அமைக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக கமல்ஹாசன் சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று மாலை மதுரை புறப்பட்டுச் சென்றார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ’ எனது தந்தை உயிருடன் இருந்த போது சிலை வைக்க வேண்டுமென விரும்பவில்லை. நாங்கள் செய்யும் பணியைதான் விரும்பினார். அவருடைய ரசிகன், மாணவன் என்ற முறையில் சிலை வைக்க விரும்பினேன். எனது கட்சியினருமே அதையேதான் விரும்பினார். ’ எனத் தெரிவித்தார்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலுக்கு தங்கள் கட்சியினர் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments