Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் பகீர் தகவல்: ஜெயலலிதாவின் காலில் விழ வலியுறுத்தப்பட்டேன்!

கமல்ஹாசன் பகீர் தகவல்: ஜெயலலிதாவின் காலில் விழ வலியுறுத்தப்பட்டேன்!

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (20:20 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசியலில் அதிரடியாக இயங்கி வருகிறார். இந்நிலையில் தந்தி தொலைகாட்சியில் அவர் அளித்த பேட்டியில் பகீர் தகவல் ஒன்றை கூறியுள்ளார்.


 
 
நடிகர் கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிட பல இன்னல்களை சந்தித்தார். அந்த சமையத்தில் அவர் ஆளும் தரப்பால் பல பிரச்சனைகளை சந்தித்ததாக கூறியுள்ளார்.
 
விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சனை வந்தபோது நான் ஜெயலலிதாவிடம் தான் உதவியை எதிர்பார்த்தேன். ஆனால் பிரச்சனையே அங்கிருந்து தான் வந்தது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது நான் அமைதியாக இருக்கவில்லை. தமிழக அரசை எதிர்த்து வழக்கு போடுவது சாதாரண விஷயம் இல்லை. அதில் நான் வெற்றியும் பெற்றேன். ஆனால் அடுத்த நாளே எனது படத்துக்கு தடை வந்தது.
 
அப்போது என்னை அவரது காலில் விழ திரைத்துறையை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்கள். காலில் விழுவது எனக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் நியாயத்துக்கு நேர் மாறாய் எனக்கும், என் தொழிலுக்கும் துரோகம் செய்திருந்தால் பெற்றவளாய் இருந்தாலும் வணங்க மாட்டேன் என்றார் கமல்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments