Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவிலில் கொள்ளை அடிப்போர்களை தாக்குவோம்: கமல் ஆவேச டுவீட்

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (08:15 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த பரபரப்பான செய்தி வெளியானால் உடனே கமலிடம் இருந்து ஒரு ஆவேச டுவீட் வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று ரஜினியின் சகோதரர், ரஜினியின் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வரும் என்று கூறியதை அடுத்து கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டரில் ஒரு ஆவேச கருத்தை தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் 'கோவிலைக் கொள்ளை அடிப்பவரை தாக்க நான் தயார். நான் தொழுபவனா இல்லையா என்பதல்ல கேள்வி. நம்பினார் கைவிடப்பட்டது, உமை ஆள்பவர் செயல், நீர் நம்பும் ஆண்டவன் செயலல்ல. பக்தர்களில் பல்வகையுண்டு. அனைவரும் என் கேளிர். ஆனால் சாதி அதைச் சகியாது. நாமும் அதைச் சகிக்கலாகாது' என்று பதிவு செய்துள்ளார்

கோவிலில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருவதும், சிலைகள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கமல்ஹாசன் தற்போது திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இந்த டுவிட்டை பதிவு செய்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments