Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அப்போ விசில் இப்போ ரவுத்திரம்: கமல் வெளியிட்ட நியூ ஆப்!

அப்போ விசில் இப்போ ரவுத்திரம்: கமல் வெளியிட்ட நியூ ஆப்!
, செவ்வாய், 16 அக்டோபர் 2018 (20:37 IST)
கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய போது, விசில் என்கிற செயலியையும் அறிமுகப்படுத்தினார். இப்போது மாணவ மாணவிகள் மத்தியில் ரவுத்திரம் என்ற செயலியை வெளியிட்டுள்ளார். 
 
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பிற்கான சிறப்பு செயலி ஒன்றின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. அந்த விழாவில், ரவுத்திரம் என பெயரிடப்பட்டுள்ள செயலியை கமல் அறிமுகம் செய்தார். 
 
இந்த விழாவில் விஜய் டிவி கோபிநாத், கவிஞர் சினேகன், ரூபா ஐபிஎஸ், ரித்விகா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த செயலி பிரத்யேகமாக பெண்களின் பாதுகாப்பிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே, இந்தியாவின் சிறந்த செயலிக்கான வெள்ளி மெடல் விருது விசில் செயலிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.14 லட்சம் தள்ளுபடி; மலைக்க வைக்கும் கார் ஆஃபர்!