Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கருணாஸ்: எச்சரித்த போலீஸ்!

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற கருணாஸ்: எச்சரித்த போலீஸ்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2017 (16:21 IST)
நடிகரும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதால் அவரை போலீசார் தடுத்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்து அனுப்பினர்.


 
 
முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி ஆகியோர் நேற்று மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இதில் பேசிய கருணாஸ், இன்று சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி இன்று, சிவகங்கை மாவட்டம் பணங்காலி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் அங்கு வந்த காவல் துறையினர் நடிகர் கருணாஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கூடாது என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி குறித்து விமர்சனம் செய்வதா? ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆ ராசா கண்டனம்..!

இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்.. லெபனானில் பெண்கள் உள்பட 492 உயிரிழப்பு..

யுகேஜி படிக்கும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை.. என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற போலீஸ்..!

சென்னையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை: அதிகபட்சமாக மழைப் பதிவு எங்கே?

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் சம்பளம் பிடித்தம்! பள்ளிக்கல்வித்துறை..!

அடுத்த கட்டுரையில்
Show comments