Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! – கரூர் பெட்ரோல் பங்கில் குவியும் கூட்டம்!

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (12:27 IST)
நாடு முழுவதும் பெட்ரோல் விலை ஏற்றத்தால் மக்கள் அதிர்ச்சியில் உள்ள நிலையில் கரூர் தனியார் பெட்ரோல் பங்க் அறிவிப்பு ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். தொடர்ந்து விலையேற்றம் கண்டு வரும் பெட்ரோல் விலை தற்போது லிட்டர் 90 ரூபாயை எட்டியுள்ளது. இது விரைவில் 100 ரூபாயாக உயரக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம் என் அறிவித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 10 திருக்குறள் சொன்னால் அரை லிட்டர் பெட்ரோலும், 20 திருக்குறள் சொன்னால் ஒரு லிட்டர் பெட்ரோலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பலர் திருக்குறள் சொல்லி பெட்ரோலை பெற ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments