Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆல் அவுட் கொசுவிரட்டியை குடித்த சிறுவன் உயிரிழப்பு!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (11:29 IST)
சென்னை அடுத்த பம்மலில் கிஷோர் என்ற மூன்று வயது சிறுவன் ஆல் அவுட் திரவத்தை தெரியாமல் குடித்துள்ளான்.

பல்லாவரம் பகுதிக்கு அருகில் இருக்கும் பம்மல் என்ற பகுதியில் உள்ள தமிழரசன் என்பவரின் மூன்று வயது மகன் கிஷோர். கடந்த ஞாயிறன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவன் தெரியாமல் ஆல் அவுட் திரவத்தைக் குடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியான அவனின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் அளித்த சிகிச்சையில் குழந்தையின் நிலைமை மோசமானதாக சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோர் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால்தான் குழந்தை உயிர் இழந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments