Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த தடவை கோவா போயே தீருவேன்! வீடுகளில் இளைஞர் கைவரிசை! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 19 மார்ச் 2023 (09:43 IST)
கோவா சுற்றுலா செல்வதற்காக பல்வேறு வீடுகளில் திருடிய இளைஞரை போலீஸார் கோவாவிற்கே சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2கே கிட்ஸின் கனவு சுற்றுலா தளமாக லடாக் இருப்பது போல, 90ஸ் கிட்ஸின் கனவு சுற்றுலா தளமாக இருந்து வருவது கோவா. கோவா செல்ல வேண்டும் என ஒவ்வொரு ஆண்டும் திட்டம் போடுவதும், இயலாமல் போவதும் பலருக்கு வாடிக்கையாக உள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த 25 வயதான சதீஷ்குமார் என்பவருக்கும் கோவா சுற்றுலா செல்ல நீண்ட காலமாக ஆசைப்பட்டு வந்துள்ளார். ஆனால் அதற்கு பண வசதி இல்லாததால் வீடுகளில் திருட முடிவெடுத்துள்ளார்.

அதன்படி அக்கம் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து சுமார் 80 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிய அவர் அந்த பணத்தை கொண்டு கோவாவிற்கு இன்ப சுற்றுலா சென்றுள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் சதீஷ்குமாரை கைது செய்ய கோவா விரைந்தனர்.

கோவாவிற்கே சென்று சதீஷ்குமாரை கைது செய்த தனிப்படை போலீஸார் அவரிடம் மீதமிருந்த நகை, பணத்தை மீட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவா சுற்றுலாவுக்காக இளைஞர் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments