Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்பதிவாளர்-அலுவலக உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

J.Durai
சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்கப்படுவதாக  தொடர்ந்து வந்த புகாரைத்  லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில்.
 
லஞ்ச ஒழிப்பு கூடுதல் சூப்பிரண்ட் ஹெக்டேர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜான் பெஞ்சமின், சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனை இரவு  9 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.30 வரை நடைபெற்ற சோதனையில் அங்கிருந்த சார்பதிவாளர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அப்ரோஸ்(32) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி மேற் கொண்ட சோதனையில். அப்ரோஸ் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1லட்சத்து,2 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது. அதிகாரிகளின் தொடர் விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்த நிலையில் அப்ரோஸ்யின் உதவியாளர் மோகன் பாபுவிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில்  உதவியாளர் மறைத்து வைத்திருந்த ரூ.1000த்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இரவு 12.30 வரை இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
 
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் இருந்த பிறகும் பொறுப்பு அதிகாரி நியமினம் செய்யப்பட்டு பத்திரப்  பதிவு நடைபெற்றது ஏன் என்பது குறித்தும்  லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 
கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு பத்திரப் பதிவு நடந்திருப்பது   பொதுமக்களிடயே பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments