Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”மனதில் உள்ளதை பேசுகிறார் ரஜினி”.. சப்போர்ட்டுக்கு வரும் குஷ்பு

Advertiesment
குஷ்பு

Arun Prasath

, செவ்வாய், 21 ஜனவரி 2020 (14:01 IST)
மனதில் உள்ளதை அச்சமின்றி பேசுகிறார் ரஜினிகாந்த் என நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

துக்ளக் பத்திரிக்கையின் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் பெரியார் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், திராவிட கழகத்தில் ரஜிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறிவருகின்றனர். இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது “நான் செய்திகளில் வெளிவந்ததைத்தான் கூறினேன், நான் மன்னிப்பு கேட்க முடியாது” என கூறினார்.
குஷ்பு

இந்நிலையில் இது குறித்து நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, “சரியோ, தவறோ தனது கருத்தில் உறுதியாக நிற்கிறார் ரஜினி, மனதில் உள்ளதை அச்சமின்றி நேர்மையுடன் கருத்து சொல்லலாம்; ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுள்ளது” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் கொரோனா வைரஸ் பலி அதிகரிப்பு: இந்தியா முன்னெச்சரிக்கை!