Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி: சென்னையில் பரபரப்பு!

ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிய காதல் ஜோடி: சென்னையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:31 IST)
சென்னை மடிப்பாக்கம் அருகே காதல் ஜோடிகள் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மடிப்பாக்கம் செந்தூர் காலனியை சேர்ந்தவர் முருகன் இவர் ரயில்வே அதிகாரியாக பணிபுரிகிறார். இவரது மனைவி லட்சுமி தலைமை செயலகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார். இவர்களது மகள் 17 வயதான சங்கீர்த்தனா கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வந்தார்.
 
இந்நிலையில் கல்லூரியில் படித்துவந்த 17 வயதான சங்கீர்த்தனா 24 வயதான ரவி என்னும் ஆட்டோ ஓட்டுநரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர பெற்றோர்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இதனையடுத்து கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சங்கீர்த்தனா தனது காதலன் ரவியுடன் சேர்ந்து வீட்டில் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து சடலங்களை மீட்ட போலீசார் அவற்றை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளர். பின்னர் இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments