Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா கிரேன் விபத்தில் உயிரிழந்த 2 தமிழர்களுக்கு நிவாரண உதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:16 IST)
நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு தமிழர்கள் இருக்கும் நிலையில் அந்த இரண்டு தமிழர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரண உதவி குறித்த உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநிலம் தானே என்ற பகுதியில்  ஏற்பட்ட கிரேன் விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் ஆகிய இரு தமிழர்களும் அடங்குவர். 
 
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை விமான நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது குடும்பத்தினருக்கு தல 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments