Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொறுப்பு டி.ஜி.பி. நியமனம்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

Advertiesment
பொறுப்பு டிஜிபி

Siva

, வியாழன், 11 செப்டம்பர் 2025 (16:35 IST)
தமிழ்நாடு காவல்துறைக்கு பொறுப்பு டி.ஜி.பி.யை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, "உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யூ.பி.எஸ்.சி-க்கு (Union Public Service Commission) இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை," என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
 
டி.ஜி.பி. பொறுப்பு காலியாக இருந்த நிலையில், தற்காலிகமாக பொறுப்பு டி.ஜி.பி.யை நியமித்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு சுட்டிக்காட்டியது.
 
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, டி.ஜி.பி. பதவிக்கான நிரந்தர நியமனம் யூ.பி.எஸ்.சி.யின் பரிந்துரையின்படிதான் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றப்படும்போது, பொறுப்பு நியமனத்திற்கு எதிரான மனுக்கள் செல்லாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செயின்ட் மேரிஸ் பெயர் வைப்பதா? குவியும் கண்டனங்கள்..!